ஆதியில் நிலைத்தவன்
ஜோதி மலையினில் பிறந்தாய்...
உண்மைப் பொருளறிய
காடு மலைதனில் நடந்தாய்.
ஐந்து கரத்தானுக்கு
அன்று சோறூட்டினாய் - அவன்
தந்தை சங்கரன் கரங்களால்
சோறூட்டப்பட்டாய்.
அருணகிரி யோகியின்
அவதாரமாய் வந்தாய்...
அழியா தேகம் கொண்டவனால்
திருநாமம் கொண்டாய்.
கண்ணனின் தரிசனத்தை
பிருந்தாவனத்தில் கண்டாய்...
மரணத்தின் தலைவனை
மணிகர்னிகையில் வென்றாய்.
பிறப்பின் நோக்கம் முழுதாய் உணர்ந்தாய்...
பிறப்பை அறுக்கும் தொழிலைக் கொண்டாய்.
வாழ்க நீ! வாழ்க நீ! வாழ்க நீ!
- யாரோ -

i like this
ReplyDeletelines from heart