இருள் கவிந்த இரவுக்குள்
இமைக்காமல் விழித்தாலும்
இருள்மட்டுமே எஞ்சியிருப்பது போல்
எத்தனை முறை கேட்டுப்பார்த்தாலும்
தேங்கியே கிடக்கின்றன எனக்குள்
சில விடையற்ற வினாக்கள் - இருளாய்
"எங்கிருந்து வந்தேன்?"
"ஏன் இங்கு பிறந்தேன்?"
"எதைத்தேடி வாழ்கிறேன்?"
"முடிவில் எங்கே போகிறேன்?"
முக்கியமான கேள்வி..
இவற்றிற்கெல்லாம் விடை தெரிந்தவன்
எங்கே இருக்கிறான்? சொல்லுங்கள்..
"கர்ப்பிணியைப்போல் சுமக்கிறேன்
இக்கேள்விகளின் சுமையை.."
அவன் உதவியோடு இதனை
இறக்கி வைக்க வேண்டும்.
...
- யாரோ -
No comments:
Post a Comment