உருவில் வந்த அருவே - மன
இருளை போக்கும் குருவே!
மனமில்லாத மௌனத்திற்குள்
வார்த்தைகளும் அர்த்தங்களுமற்ற
வெற்றுவெளிக்குள் எனை
நிலைநிறுத்திவிடு - ஏனெனில்
நொடியின் ஆயிரத்தில் ஒருபங்கு காலத்திற்குள்
அறிவினால் அறியமுடியாத அவகாசத்திற்குள்
அசைவேயின்றி ஆயிரமாயிரம் முறைகள்
மனமற்ற வெளியிலிருந்து - மாயையின்
தளத்திற்குள் தூக்கியெறியப்படுகிறேன்
இம்மாயை பொய்யெனத் தெரிகிறது - ஆனால்
நிஜத்திற்குள் பிரவேசிக்கமுடியவில்லை.
அதனால் இறைவா...
நீரில் மூழ்குபவன் கையில் கிடைத்த கயிறுபோல,
உன் பாதங்களை நான் பற்றிக்கொள்கிறேன்.
எனை மெதுவாய் இழுத்து உனக்குள் வைத்துவிடு.
இறையுள் உறையும் இறையாய்
நானும் இறையாகிறேன்.
- யாரோ -
This comment has been removed by a blog administrator.
ReplyDelete